சித்தாந்தன்
இன்றைய பொழுதின்
கடைசிக் கதவையும் சாத்துகின்றேன்
ஒரு கரிய குரல்
தெருவில் அழைக்கிறது
காலத்தின் தனிமையை மூடி
நுாற்றெட்டு இறகுகளுடன் ஒரு பறவை
நுhறாயிரம் இதழ்களோடு ஒரு மலர்
நினைவிலாடுகின்றன
மரணத்தின் கூரிய அலகுகளுடன்
கடந்துபோயின பொழுதுகள்
நினைவுகளைப் புதைக்க முடியவில்லை
மரணமே யாவற்றிலும் நித்தியமாயிற்று
தனிமையின் சிறகுகளைக்
காற்றுக் கருக்கிற்று
நினைவுகளை உதறமுடியாத
அநாதர பொழுதின் கடைசிக் கதவையும்
சாத்துகையில்
ஒரு கரிய குரல் அழைக்கிறது
மரணத்தின் முற்றத்தை
கடக்கமுடியாக் காலத்தின்
இரத்தம் பீறிடும் குரல்களை
யாரும் புதைக்கவில்லை.