26 செப்டம்பர், 2013

வாழ்வை உறிஞ்சி நீளும் கோடை


சித்தாந்தன்-

கடைசியில் கடவுள் சாத்தானுடன்
கைகுலுக்கிக் கொண்டார்.
அங்கவஸ்திரத்தில் படிந்திருந்த புழுதியை
இலாவகமாக உதறிவிட்டார்.
கைகளில் படிந்திருந்த குருதிக் கறையை
அவரால் கழுவ முடியவில்லை.
தன்னைத் துரத்தும் 
ஓலங்களிலிருந்தும் அவரால் மீளமுடியவில்லை.
பிணங்களின் மீதமர்ந்து
விழிகளைப் பிடுங்கும் காகங்களின் மீது
சாபமாய் இரண்டொரு வார்த்தைகளை வீசினார்
அவையும் உதடுகளைக் கூடத் தாண்டவில்லை.
சலிக்கும் வாழ்வை எழுதியெழுதி
வெறுப்புற்றார்.
சாபங்களின் புற்றில்
பாம்புகளுடன் சல்லாபித்து
காலத்தைக் கழிப்பதே விதியென்றான பின்
தகிக்கும் கோடை
வாழ்வை உறிஞ்சி நீள்வதாய் புலம்பினார்.
நிலம் பிளந்து
வேர்கள் இறுகி கிளை விரித்த மரத்தில்
காய்களோ கனிகளோ இருக்கவில்லை
பறவைகள் கூட வந்தமரவில்லை.

00