சித்தாந்தன்
பூதங்களை வரைபவனின் கனவுகளுக்குள்
நுழைந்துகொண்டன தேவதைகள்
கடற்கரையில் மணல்வீடு கட்டிய அவன்
தேவதைகளுக்கான அறைகளை
வர்ணமடித்துச் செப்பனிட்டான்
ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாக
வடிவமைக்கப்பட்ட குளியலறைகளுக்குள்ளும்
படுக்கையறைகளுக்குள்ளும்
உள்ளாடைகளைக் காயவிடும்
கொடிகளைக் கட்டினான்
அந்திமத்தில் வந்திறங்கிய தேவதைகள்
வானளவு அறைகளை அவனிடம் கேட்டன
அவன் கைகளை அகட்டி
பூதங்களைப் போல் விரிந்த வானங்களை
வரைந்து காட்டினான்
திருப்தியுறாத தேவதைகள்
அவனை மலடாகும்படி சாபமிட்டன
அவனின் மணல் வீட்டை
இழுத்துச் சென்றுவிட்டது அலை
சபிக்கப்பட்ட அவனின் குறியினுள்
இரைந்துகொண்டிருக்கிறது கடல்
அந்திமத்தின் வர்ணங்களில்
கரைந்துருகுகிறது வானம்
நன்றி- உயிர் நிழல்
10 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக